தினம் ஒரு திருக்குறள் 30-07-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jul 29, 2024, 6:33:19 PM

குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.

மு.வரதராசன் விளக்கம்:

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்

சாலமன் பாப்பையா விளக்கம்:

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

கலைஞர் விளக்கம்:

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

English Couplet 207:

From every enmity incurred there is to 'scape, a way;

The wrath of evil deeds will dog men's steps, and slay.

Couplet Explanation:

However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

Transliteration(Tamil to English):

enaippakai yutraarum uyvar vinaippakai

veeyaadhu pinsendru adum

VIDEOS

Recommended