தினம் ஒரு திருக்குறள் 29-08-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Aug 29, 2024, 7:08:33 AM

திருக்குறள்

குறள் 211:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.

மு.வரதராசன் விளக்கம்:

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.

கலைஞர் விளக்கம்:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

English Couplet 211:

Duty demands no recompense; to clouds of heaven,

By men on earth, what answering gift is given?.

Couplet Explanation:

Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?.

Transliteration(Tamil to English):

kaimmaaRu vaeNtaa katappaatu maarimaattu

en-aatrung kolloa ulaku

VIDEOS

Recommended