தினம் ஒரு திருக்குறள் 27-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 26, 2024, 6:50:59 PM

குறள் 238:

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

மு.வரதராசன் விளக்கம்:

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

கலைஞர் விளக்கம்:

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

English Couplet 238:

Fame is virtue's child, they say; if, then,

You childless live, you live the scorn of men.

Couplet Explanation:

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

Transliteration(Tamil to English):

vasaiyenpa vaiyaththaark kellaam isaiyennum

echcham peRaaa vitin

VIDEOS

Recommended