தினம் ஒரு திருக்குறள் 26-04-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Apr 25, 2024, 6:36:23 PM

குறள் 127:

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

மு.வரதராசன் விளக்கம்:

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

கலைஞர் விளக்கம்:

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

English Couplet 127:

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;

If not, through fault of tongue, they bitter tears shall weep

Couplet Explanation:

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue

Transliteration(Tamil to English):

yaakaavaa raayinum naakaakka kaavaakkaal

soakaappar sollizhukkup pattu

VIDEOS

Recommended