தினம் ஒரு திருக்குறள் 24-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 23, 2024, 6:15:21 PM

குறள் 235:

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.

மு.வரதராசன் விளக்கம்:

புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

கலைஞர் விளக்கம்:

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

English Couplet 235:

Loss that is gain, and death of life's true bliss fulfilled,

Are fruits which only wisdom rare can yield.

Couplet Explanation:

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

Transliteration(Tamil to English):

naththampoal kaedum uLadhaakum saakkaatum

viththakark kallaal aridhu

VIDEOS

Recommended