தினம் ஒரு திருக்குறள் 12-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Sep 11, 2024, 8:33:16 PM

திருக்குறள்

குறள் 224:

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு.

மு.வரதராசன் விளக்கம்:

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

கலைஞர் விளக்கம்:

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

English Couplet 224:

The suppliants' cry for aid yields scant delight,

Until you see his face with grateful gladness bright.

Couplet Explanation:

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

Transliteration(Tamil to English):

innaadhu irakkap patudhal irandhavar

inmukanG kaaNum aLavu

 

VIDEOS

Recommended