தினம் ஒரு திருக்குறள் 11-10-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Oct 10, 2024, 6:16:24 PM

குறள் 249:

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

மு.வரதராசன் விளக்கம்:

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

கலைஞர் விளக்கம்:

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.

English Couplet 249:

When souls unwise true wisdom's mystic vision see,

The 'graceless' man may work true works of charity.

Couplet Explanation:

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

Transliteration(Tamil to English):

theruLaadhaan meypporuL kaNtatraal thaerin

aruLaadhaan seyyum aRam

VIDEOS

Recommended