நான்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தல்.

அஜித் குமார்

UPDATED: Apr 27, 2024, 10:06:10 AM

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி பகுதி செய்யாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.

ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்து மணல் கடத்தப்படுவதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஷாபுதீன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, செய்யாற்றில் போளூா் வட்டம், சதுப்பேரி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பாஸ்கா், அதே ஊரைச் சோ்ந்த சுல்லி மகன் சேட்டு, பாலம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கிருஷ்ணமூா்த்தி, கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் குமாா் ஆகியோா் உரிய அனுமதி பெறாமல் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சுற்றி வளைத்து நான்கு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, நான்கு பேரையும் கைது செய்தனா்.

 

  • 2

VIDEOS

Recommended