- முகப்பு
- தி கிரேட் இந்தியா நியூஸ் எதிரொலி
- தி கிரேட் இந்தியா செய்தியின் எதிரொலியாக பல பேர் உயிர் காப்பாற்றப்பட்டது.
தி கிரேட் இந்தியா செய்தியின் எதிரொலியாக பல பேர் உயிர் காப்பாற்றப்பட்டது.
குமரவேல்
UPDATED: Sep 26, 2023, 6:17:15 PM
நெல்லிகுப்பம் வஜீர்கான் தெருவில் உள்ள வருவாய் அலுவலகம் அருகே உயர் மின்னழுத்த மின்கம்பம் சாய்ந்து வருகிறது. இதனால் மின் கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது என்றும் கடந்த 23ம் தேதி அன்று செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று 26.09.2023 காலை கோட்ட உதவி செயற் பொறியாளர் சசிகுமார் தலைமையில் நெல்லிக்குப்பம் உதவி மின் பொறியாளர் பிரபு, மின் பாதை ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்படி இடத்தை பார்வையிட்டு ராட்சத கிரேன் மூலம் மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது.
இதனால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உடனடியாக மேலே குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வளித்த அனைவருக்கும் தி கிரேட் இந்தியா செய்தி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.