• முகப்பு
  • இலங்கை
  • பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் 24 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அறிவிக்கும்

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் 24 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அறிவிக்கும்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 18, 2024, 5:34:56 PM

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

அத்துடன் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? அன்றைய தினம் உத்தரவு அறிவிக்கப்படும் என்று பெஞ்ச் குறிப்பிட்டுள்ளது.

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்  மற்றும் சிலர் இந்த மனுக்களை சமர்ப்பித்திருந்த நிலையில், அந்த மனுக்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended