• முகப்பு
  • இலங்கை
  • பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலை திட்டங்களிலும் தோட்ட நிறுவனத்தின் இடையூறு

பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலை திட்டங்களிலும் தோட்ட நிறுவனத்தின் இடையூறு

ராமு தனராஜா

UPDATED: Aug 8, 2024, 6:33:33 AM

நாடாளுமன்ற உறுப்பினரும்  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷின் 2024-ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 50 லட்சம் ரூபாய் நேப்பியர் தோட்ட பாதை புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் தோட்ட அதிகாரியின் இடையூறு காரணமாக புணரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் தோட்டத் தொழிலாளர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்துதோட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது .

மேலும் மேற்படி விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தோட்ட அதிகாரியுடன் கலந்துரையாடியதற்கு அமைய பாதை புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டதோடு பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டமும் முடிவுற்றது.

 

VIDEOS

Recommended