• முகப்பு
  • ஆன்மீகம்
  • தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Aug 20, 2024, 7:34:10 AM

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நீர் வெட்டுடன் பெரஹரா வைபவங்கள் முற்றுப் பெற்றன. 

கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்ட விசேட மேடையில் இருந்து ஜனாதிபதி தம்பதியினர் பெரஹராவைப் பார்வையிட்டார். 

மேற்படி இறுதி ரந்தோலி பெரஹராவில் புனித தந்தத்தை கண்டி தலதா மாளிகையின் இந்திராஜா கொம்பன் யானை சுமந்து சென்றது.  

இறுதிப் பரஹராவை அடுத்து  பகல் பெரஹரா இடம் பெற்றது. நீர்த்தோற்வத்துடன் பெரஹரா நிறைவடைந்தது. 

கெட்டம்பே பகுதியில் உள்ள மகாவலி கங்கையில் சம்பிரதாய பூர்வமாக அதிகாலையில் நீர் வெட்டு இடம் பெற்றது.

 

VIDEOS

Recommended