• முகப்பு
  • ஆன்மீகம்
  • வரும் காலங்களில் இலங்கை அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனின் பண்ணிசை வகுப்புகள் தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட பேரியக்கத்தால் நடத்தப்படும்

வரும் காலங்களில் இலங்கை அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனின் பண்ணிசை வகுப்புகள் தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட பேரியக்கத்தால் நடத்தப்படும்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 29, 2024, 12:01:08 PM

Sri Lanka News

இலங்கை நாட்டில், மே மாதம் 13 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை உலகின் முன்னோடியான சைவமும் தமிழும் தழுவிய திருமுறை இசை நிகழ்வு, மற்றும் சமய சொற்பொழிவுகள் என்பன இடம் பெற்றன.

Latest Sri Lanka News

மேலும் இலங்கையில் உள்ள அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு திருமுறை பயிற்சி வகுப்பு நடத்த தமிழ்நாட்டில் உள்ள திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்புப் பேரவை மூலம் நிறுவனத் தலைவர்  திரு முறைவகுப்பு ஆசிரியர் "தெய்வத்தமிழிசை அறிஞர்" "பண்ணிசைச் செல்வர்" "திருமுறை கலைக்களஞ்சியம்" "முனைவர்" திருவிடைமருதூர்  சிவ.ச.நடராஜதேசிகர் ஐயா அவர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. 

Live Sri Lanka News

வரும் காலங்களில் இலங்கை அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனின் பண்ணிசை வகுப்புகள் தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட பேரியக்கத்தால் நடத்தப்படும்.

மேலும் இலங்கை மண்ணில் இருந்து நமது தாயகம் திரும்பிய "பண்ணிசைச் செல்வர்" "தெய்வத்தமிழிசை அறிஞர்" டாக்டர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் அவர்களையும்,

உதவியாளர் சிவ.பிரகாஷ் அவர்களையும், சென்னை விமான நிலையத்தில் சிவசேனா கட்சி சார்பாக சிவசேனா மாநில செயல் தலைவர் "செந்தமிழ் திருமுறைக் காவலர்" பாவை.க.சசிகுமார் அவர்கள், மற்றும் சென்னை "மண்டலத் தலைவர்" த.அழகுராஜா அவர்களும், வரவேற்ற்றனர்.

 

VIDEOS

Recommended