• முகப்பு
  • அரசியல்
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்தறை மாவட்ட அமைப்பு ரணிலுக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்தறை மாவட்ட அமைப்பு ரணிலுக்கு ஆதரவு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 1, 2024, 12:21:05 PM

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்தறை மாவட்ட அமைப்பு இன்று பிற்பகல் கூடி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கு  ஆதரவளிப்பதாக உறுதிமொழி எடுப்பதாக ஏகமனதாக தீர்மானித்தது என்று  அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

மாத்தறையில் தேர்தல் அமைப்பாளர்கள், முன்னாள் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள், இணைந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிடம் கோருவதற்கும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறும், SLPPயின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை நீக்கிவிட்டு  ரமேஷ் பத்திரனவை SLPP யின் பொதுச் செயலாளராக நியமிக்குமாறும் SLPPயிடம் கோறி க்கை முன்வைப்பது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended