திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரங்கள்.

S.முருகன்

UPDATED: Jul 22, 2024, 8:25:58 AM

திருவள்ளூர் மாவட்டம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய கழகத்தின் சாா்பில் ஒன்றிய கழக செயலாளர் நாகப்பூண்டி கோ.குமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார் குப்பம் ஆர்.கே பேட்டை பகுதிகளில் நடைபெற்றது. 

Latest District News in Tamil 

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அரக்கோணம்நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான திருத்தணி கோ.அரி பங்கேற்று ஆர்கே பேட்டை பஜார் வீதி அம்மையார் குப்பம் பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபார பெருங்குடி மக்கள் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

News

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத விடியா திமுக அரசைக் கண்டித்தும் அதில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. 

நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

 

VIDEOS

Recommended