ஈழவர் ஜனநாயக முன்னணி சஜித்துக்கு ஆதரவு 

வவுனியா

UPDATED: Aug 23, 2024, 10:08:01 PM

ஈழவர் ஜனநாயக முன்னணி ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பதாக கட்சியின் செயலாளர் அருளப்பு இராஜநாயகம் தெரிவித்தார்.

இன்று வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியாக நாங்கள் மக்கள் மத்தியிலே சென்று எமது கொள்கைகளை வெளிப்படையாக விளங்கப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

மேலும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்ற அரச நிறுவனங்கள் ஊழல் லஞ்சம் போதைவஸ்து பாவனைகள் போன்றவற்றை ஒழிக்க ஒரு அதிகாரத்தை கொண்டிருக்கிற தலைமையை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தோம். 

அந்த வகையிலே தேசிய ரீதியில் பெரும்பான்மை கட்சியை சேர்ந்த ஒருவர்தான் இம்முறை ஜனாதிபதியாக வருவார். அவர்களிலே எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கின்ற ஒருவரை சந்தித்து கலந்துரையாடி அவற்றை ஏற்றுக்கொண்பவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக.

அந்த தம்மால் இக் கோரிக்கைகளை முடிந்த அளவு நிறைவேற்றுவோம் என தெரிவித்ததன் அடிப்படையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலிலே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என தீர்மானம் எடுத்துள்ளோம். 

அந்த வகையிலே எமது கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை அவரிடம் கையளிந்திருந்தோம் என தெரிவித்தார்.



VIDEOS

RELATED NEWS

Recommended