![](assets/tgi-logo2.jpg)
துருக்கியில் இடம் பெறும் சர்வதேச தொழிலாளர் சம்மேளன நிகழ்வில் வடிவேல் சுரேஷ்
![துருக்கியில் இடம் பெறும் சர்வதேச தொழிலாளர் சம்மேளன நிகழ்வில் வடிவேல் சுரேஷ்](https://api.thegreatindianews.com/uploads/original/7d1c107d-2ead-4ea9-b3ee-006d8469b18e-img_20240223_155903.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
பதுளை - ராமு தனராஜா
UPDATED: Feb 23, 2024, 10:32:39 AM
துருக்கியின் தலைநகரமான அங்காராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILC) முதலாவது பொதுச்சபை கூட்டத்தில் இலங்கையையும் மலையக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் பங்கேற்றுள்ளார்.
பல நாடுகளை சேர்ந்த பல மொழிகள் பேசுகின்ற தொழிற்சங்க வாதிகளும் அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள போதும் தமிழ் பேசும் பிரதிநிதியாக இவர் மட்டுமே பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.