ஓய்வு பெற்ற அதிபர்கள் கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும்

பாரா தாஹிர்

UPDATED: Feb 26, 2024, 9:13:01 AM

வை.எம் எம்.ஏ கேகாலை மாவட்ட கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கேகாலை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அதிபர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.அத்துடன் அகில இலங்கை வை.எம். எம்.ஏ பேரவையினால் ,அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மீலாத் பரிசளிப்பு நிகழ்வும், மாவனல்லை நாகூர்கம திவ்மினி"மண்டபத்தில் வெகு விமர்சை யாகநடை பெற்றது.

Also Read.முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்

கேகாலை மாவட்ட பணிப்பாளர் எம்.கே.ஏ.லுக்மான் தலைமையில் மேற்படி நிகழ்வுகள் இடம் பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மலேசியா தூதுவர் பாதில் ஹிஷாம் ஆதம் கலந்து கொண்டார்.

Also Read.வளிமண்டலவியல் ஓர் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா

,விசேட அதிதியாக  அமைச்சர் ரஞ்சித் சியபலாப்பிட்டிய ,சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் டப்லியூ எம். எம். எஸ். எம். கமால்தீன்,வை.எம். எம். ஏ. தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட்,முன்னாள் தலைவர் சஹீட் எம் ரிஸ்மி,நியூமன்ஸ் கொலேஜ் பணிப்பாளர் dr.ஹுஸைன் முகமட்,அதிபர் ஏ.கே.எம் பைசல்,பிரதேச சபை உறுப்பினர் எம் நௌசாத் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் நிகழ்வில் சுமார் என்பது ஓய்வு பெற்ற அதிபர்கள் கௌரவிக்கப்பட்டதோடு,சுமார் முப்பது மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு சின்னம் அணிவிக்கப்பட்டது.

Also Read.ஊடகவியலாளர்களின் கடமையை தடுப்பது மனித உரிமை மீறலாகும்

VIDEOS

RELATED NEWS

Recommended