புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Feb 27, 2024, 3:17:53 AM

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Read.நிகழ் நிலை காப்பு மற்றும் பயங்கரவாத சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால்   தேசபந்து தென்னகோனிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

Also Read.கிரமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ்

தேசபந்து தென்னகோன் தொடர்பில் எதிர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டு வந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended