எம். வி .குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்!

வாசுதேவன்

UPDATED: May 21, 2023, 2:45:29 PM

வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், எம் .வி. குப்பம் ஊராட்சி, புதூர் கிராமத்தில் பழுதாகி போன மின்கம்பத்தில் முத்து என்ற மின்துறை ஊழியர் கம்பத்தின் மீது ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்தது. இதனால் மின் ஊழியர் முத்து படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மின் துறை அலுவலர்களும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். ஓ. வசீமுல்லா ஆகியோர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். 

அவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு முத்துவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மின் ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended