போயர் சமுதாய நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - கே.என்.நேரு.

JK

UPDATED: Sep 13, 2024, 9:46:15 AM

திருச்சி மாவட்டம்

போயர் சமுதாய நல சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்களாக ராஜ், சின்னசாமி, கணேசன், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்டத் துணைச் செயலாளராக முருகன், லோகநாதன், மாவட்ட பொருளாளராக குமார் உட்பட நிர்வாகிகளாக பதவி ஏற்று கொண்டனர்.

கே.என்.நேரு

இந்நிகழ்வில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்வில் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த விழாவில் நல வாரிய அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் நல வாரியம் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்,

Breaking News In Tamil

இட ஒதுக்கீடு கேட்டுள்ளனர் அது நீதிமன்றம் சம்பந்தப்பட்டது, இது குறித்து முதலமைச்சரிடம் முறையிடுவேன்,  கட்டுமானத்திற்கான தலைவர் பதவியை கேட்டுள்ளனர் இது குறித்து முதலமைச்சரிடம் கொண்டு செல்கிறேன்.

உங்களைப் போன்றவர்கள் எங்களுடன் தேவை உங்களது தேவைகளை எல்லாவற்றையும் நாங்கள் செய்து தருகிறோம்.

மேலும் உங்கள் கோரிக்கையுடன் வந்தால் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட வாய்ப்பு ஏற்படுத்திய தருகிறேன் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended