பூவை மூர்த்தியார் 22 வது நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

ஆனந்த்

UPDATED: Sep 3, 2024, 7:55:52 PM

திருவள்ளூர் மாவட்டம்

பூவிருந்தவல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் பதிவு எண் 68/2024 சார்பில் பூவிருந்தவல்லி வழக்கறிஞர்கள் சங்கமும் அப்போலோ மருத்துவமனையும் இணைந்து பூவிருந்தவல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அலுவலக வளாகத்தில் பூவை மூர்த்தியார் 22 வது நினைவு நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது

பூவை மூர்த்தியார்

வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தாமஸ் பர்ண பாஸ் தலைமை தாங்கினார் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தார் இந்த முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு இசிஜி கண் குறைபாடுகள் பல் பரிசோதனைகள் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்

ஜெகன் மூர்த்தியார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூவிருந்தவல்லி ஒருங்கிணைந்த  நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பூவை ஜெகன் மூர்த்தியார் கலந்துகொண்டு பூவை மூர்த்தியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள்

Latest Political News

நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெகதீசன் நூலகர் கோபி மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended