ஊராட்சி மன்ற தலைவர், கணவர் மீது சரமாரி தாக்குதல்.

அஜித்குமார்

UPDATED: Jul 25, 2024, 1:48:27 PM

திருவண்ணாமலை மாவட்டம்

செய்யாறு அடுத்த சிறு வஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும் அவரது அண்ணன் முறை உறவினரான கோதண்டம் குடும்பத் தினருக்கும், நிலத்திற்கு செல்லும் வழிதொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், 24ம் தேதி செந்தில்  குமாருக்கும் கோதண்டனின் உறவினர் பெருமாள், அவரது மகன் பன்னீர்செல்வம், கோதண்டனின் மகன் தங்கராஜ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் 3 பேரும் சேர்ந்து செந்தில்கு மாரை தாக்கியதாக கூறப்ப டுகிறது.

Live Updates Tamil

இதையறிந்த செந்தில்குமாரின் மாமனார் தினகரன்(50), அவரது மனைவியான சிறுவஞ்சிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரான ராஜேஸ்வரி ஆகியோர் விரைந்து சென்று செந்தில்குமாரை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சேர்த்தனர். அதன் பிறகு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

NEWS

அப்போது, அங்கு வந்த பெருமாள், பன்னீர் செல்வம், தங்கராஜ் ஆகிய 3 பேரும் தினகரன், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகி யோரிடம் தகராறு செய்து கற்கள், இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தினகரன் பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பெரு மாள், பன்னீர்செல்வம், தங்கராஜ் ஆகியோரை தேடி வருகிறார்.

 

VIDEOS

Recommended