திமிரியில் விபரீதம்: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

பரணி

UPDATED: Jul 14, 2024, 1:00:14 PM

Latest District News in Tamil 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி குமரகிரி சுப்பிரமணியசாமி கோயில் மலையடிவாரத்தில் உள்ள கூலித் தொழிலாளி ராஜா என்பவரின் 8 வயது மகன் முத்து வீட்டருகே இரவு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மின்வாரிய கம்பத்திலிருந்து வீட்டு இணைப்புக்கு செல்லும் ஒயரை இடையில் தாங்கிப்பிடிக்க நட்டு வைத்துள்ள இரும்பு குழாய் பக்கத்தில் நிறுத்தியிருந்த சைக்கிளை தொட்டதும் முத்து தூக்கி வீசப்பட்டான் உடனே அருகிலிருந்தவர்கள் அவனை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

NEWS

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்துஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி,மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக் காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended