தினம் ஒரு திருக்குறள் 10-06-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jun 9, 2024, 5:58:24 PM

குறள் 165:

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.

மு.வரதராசன் விளக்கம்:

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

கலைஞர் விளக்கம்:

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

English Couplet 165:

Envy they have within! Enough to seat their fate!

Though foemen fail, envy can ruin consummate..

Couplet Explanation:

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

Transliteration(Tamil to English):

azhukkaaRu udaiyaarkku adhusaalum onnaar

vazhukkaayum kaeteen padhu

VIDEOS

Recommended