• முகப்பு
  • குற்றம்
  • ஆற்காடு அருகே ரூ.12 லட்சம் கொள்ளை அடித்த 6 பேர் கைது, இருவருக்கு போலீசார் வலைவீச்சு.

ஆற்காடு அருகே ரூ.12 லட்சம் கொள்ளை அடித்த 6 பேர் கைது, இருவருக்கு போலீசார் வலைவீச்சு.

பரணி

UPDATED: Jun 20, 2024, 7:51:18 PM

இராணிப்பேட்டை மாவட்டம் தென்னந்தியாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், பழகிய நண்பனிடமிருந்து பேராசையால் கூலிப்படை உதவியுடன் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்த கும்பலை மொத்தமாக கைது செய்த இரத்தினகிரி போலீசார், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் நபீஸ் (29) பின்பேமண்ட் பேங்க் எனும் தனியார் வங்கி ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார்.

இதில் அதேபகுதியை சேர்ந்த முகமதி இதிரீஸ், நிசாமுதீன், அலாவுதீன் ஆகியோர் தொழில் பங்குதாரர்களாக ஒன்று சேர்ந்து தொழிலை நடத்தி வந்துள்ளனர்.

இலட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் 100 ரூபாய் கமிஷன் கிடைக்கும் என்பதால், பலபகுதிகளில் வரவேண்டிய பணத்தை நால்வரும் வசூல் செய்து அதை மறுநாள் வங்கியில் செலுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், திருத்தணி மற்றும் அரக்கோணம் சுற்று வட்டார பகுதிகளில் பணம் வசூல் நிசாமுதீன், தனது நண்பனான ஆசிப்(26) என்பவரை அடிக்கடி வசூலுக்கு அழைத்து சென்றுள்ளார் ஆசிப் மனதில் பேராசை உருவாகியுள்ளது.

அதிக பணத்தை பார்த்த ஆசிப், அதனை கொள்ளையடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி, விபரீதத்தின் உச்ச மாக கூலிப்படையின் உதவியை நாடியுள் ளார். ஆற்காடு முப்பதுவெட்டியை சேர்ந்த அமீன்(29) என்பவரிடம் உதவி கேட்ட நிலையில், அமீன் சிறையில் தனக்கு நண்பரான திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை சேர்ந்த பாரதி(22), ஆரணியை சேர்ந்த சதீஷ்(20) ஆகியோரிடம் திட்டம் பற்றகூறியுள்ளார்.

பின்னர் முப்பதுவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து வசூல் செய்து வரும் பணத்தை கொள்ளையட்டிக்க திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த மாதம் 9ம் தேதி நிசாமு தீன், 12 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து எடுத்து வந்த போது. சரியாக தென் நந்தியாலம் பகுதியில் நிசாமுதீனை வழிமறித்த கும்ல் 12 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளது.

இது குறித்து சக பங்குதாரர்களிடம் நிசாமுதீன் கூறிய நிலையில், அனைவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 9ம் தேதியன்று. இரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வாகன தணிக்கையின் போது ஆசிப்(26) அமீன்(29), அஜய் (26), தனுஷ் (18), அஷ் (21), ஜெயச்சந்திரன்(33) ஆகிய 6 பேரை கைது செய்ததோடு 1.20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் ஆன பாரதி (22), சதீஷ்(20) ஆகிய இருவரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended