• முகப்பு
  • குற்றம்
  • திருவொற்றியூர் கோமாதா நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 220 கிலோ குட்கா பறிமுதல்.

திருவொற்றியூர் கோமாதா நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 220 கிலோ குட்கா பறிமுதல்.

நெல்சன் கென்னடி

UPDATED: Oct 3, 2024, 8:01:26 AM

சென்னை

திருவொற்றியூர் கோமாதா நகர் பகுதியில் சக்கரவர்த்தி வயது 26 என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹன்ஸ் விற்பனை செய்து வருவதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் ரஜினிஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதன் பேரில் ஆய்வாளரின் தனிப்படையினர் சக்கரவர்த்தியின் கடையில் சோதனை செய்தனர்

சோதனையில் கடையில் தடை செய்யப்பட்ட 220 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்கரவர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்

மேலும் திருவொற்றியூர் பகுதிக்கு ஆய்வாளர் ரஜினிஸ் வந்த பிறகு ஆங்காங்கே தொடர் குட்கா வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended