சோமங்கலம் அருகே காரில் போதை பொருட்களை கடத்திய 2 பேர்.

லட்சுமி காந்த்

UPDATED: Sep 26, 2024, 10:11:15 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

சோமங்கலம் அடுத்த நல்லூர் அருகே குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிகையில் ஈடுபட்டனர். அப்போது குன்றத்தூர் நோக்கி வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல்லிப், பாக்கு போன்ற போதை வஸ்துக்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரிய வந்தது. 

பின்னர் காரில் கடத்திச் செல்லப்பட்ட 180 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார்(27), கணேஷ்(26) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

Latest Kanchipuram District News In Tamil

விசாரணையில் ராஜ்குமார் காட்ரம்பாக்கம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருவதும், கடையில் சட்டவிரோதமாக போதை வஸ்துக்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் யாரிடமிருந்து குட்கா வாங்கப்பட்டது என்பது குறித்து போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended