• முகப்பு
  • சென்னை
  • வளசரவாக்கத்தில் டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாக்கிய நபர்.

வளசரவாக்கத்தில் டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாக்கிய நபர்.

S.முருகன்

UPDATED: Apr 23, 2024, 7:24:13 PM

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மது கடையில் பாகேஷ்குமார்(37) என்பவர் நேற்று அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அவரது எதிரில் அமர்ந்து மது அருந்திய மற்றொரு நபர் பாகேஷ்குமாரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார் இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் பாகேஷ் குமாரை மற்றொரு நபர் பீர் பாட்டிலை கொண்டு பயங்கரமாக தலையில் தாக்கியுள்ளார் இதில் ரத்த வெள்ளத்தில்  பாகேஷ் குமார் சரிந்து விழுந்துள்ளார்.

பின்னர் இதுக்குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடத்த பாகேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில்

பீர் பாட்டிலால் தாக்கிய நபர் வளசரவாக்கம் பெத்தாண்யா நகர் பகுதி சேர்ந்த முத்துஜா அகமது (26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மது கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாக்கி ஒருவர் சிகிச்சை பெற்று வரக்கூடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

  • 3

VIDEOS

Recommended