கலியோடை பாலத்தின் நீர்மட்டம் உயர்வு
ஜெமீல் அகமட்
UPDATED: Jan 10, 2024, 6:42:50 AM
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கலியோடை பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்து செல்வதினால் அருகில் உள்ள வயல் காணிகள் பாதிக்கப்பட்டு தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் நீர் புகுந்துள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால் விவசாயம் முற்றாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு இதுவரைக்கும் எவ்வித பாதக நிலையும் ஏற்படவில்லை.