மக்களின் பிரச்சினை தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு செல்லும் வரை
ரத்னம் விஜயகுமாரி
UPDATED: Apr 20, 2024, 7:21:48 AM
அட்டன் பிரதேசத்தின் கெம்ப்வெளி பகுதியில் மக்கள் நடமாடும் பாதையின் ஊடாக செல்லும் வாய்க்கால் உரியமுறையில் பராமரிகாகப்படாது நீர் தேங்கிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து செய்யும் பொதுமக்களும் அப்பகுதி யில் வாழும் மக்களும் டெங்கு நுளம்புக்கு பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படக்கூடிய
நிலை ஏற்பட காரணமாக அமையலாம் என அப்பகுதிவாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அப்பிரதேசத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி மேற்படி நிலை ஏற்படாது தடுக்க ஆவண செய்யுமாறு பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.