• முகப்பு
  • இலங்கை
  • தொழிலாளர்கள் உள்வாங்காமல் கம்பனிக்கு எதிராக எதிர்காலத்தில் வடிவேல் சுரேஸ் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு

தொழிலாளர்கள் உள்வாங்காமல் கம்பனிக்கு எதிராக எதிர்காலத்தில் வடிவேல் சுரேஸ் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 19, 2024, 3:05:51 PM

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்களின் பாணியில் தொழிலாளர்கள் இன்றி எதிர்காலத்தில் கம்பனிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு இ.தொ.கா முழுமையான ஆதரவு வழங்கும் என இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

வடிவேல் சுரேஷ் அவர்கள் ஒரு தொழிற்சங்கவாதி தொழிலாளர்களுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களில்,சில போராட்டங்கள் தொழிலாளர்களை உள்ளடக்க கூடிய போராட்டங்களாக இருக்கும் சில போராட்டங்கள் தொழிலாளர்கள் உள்வாங்கப்படாத போராட்ட்டங்களாக இருக்கும் அவ்வாறான போராட்ட்டங்களை ஒரு தொழிற்சங்கவாதி என்ற வகையில் அவர் நன்கு அறிவார் என்பதை நான் நம்புகிறேன்.

இ.தொ.கா முன்னெடுத்த போராட்டம் தொடர்பாக வடிவேல் சுரேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழிலாளர்களை உள்வாங்கி போராட்டங்கள் மேற்கொண்டது தனக்கு விருப்பம் இல்லை என கருத்து தெரிவித்தது அவருடைய எதிர்கால போராட்ட திட்டங்களை வெளிக்காட்டுகிறது.

இன்று இ.தொ.காவை விமர்சித்த வடிவேல் சுரேஷ் எதிர்காலத்தில் கம்பனிக்கு எதிராக மேற்கொள்ளும் போராட்ட்டங்களில் தொழிலாளர்கள் உள்வாங்கப்படாமல் இருந்தால் அதை இ.தொ.கா வரவேற்கும் என சக்திவேல் தெரிவித்துள்ளார்.

 

  • 1

VIDEOS

Recommended