• முகப்பு
  • இலங்கை
  • தற்போது அரசாங்கத்துக்கும் மாற்று அரசியல் சக்திகளுக்கும் இந்த விவசாயிகள் சுமையாக இருந்தாலும் எமக்கு அவர்கள் மிகப்பெரிய வளமாகும்

தற்போது அரசாங்கத்துக்கும் மாற்று அரசியல் சக்திகளுக்கும் இந்த விவசாயிகள் சுமையாக இருந்தாலும் எமக்கு அவர்கள் மிகப்பெரிய வளமாகும்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 31, 2024, 2:39:55 PM

கொரோனா அச்சுறுத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் வங்கரோத்து தன்மை, நானோ உர மோசடி என்பவற்றின் காரணமாக விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

original/img-20240831-wa0022
மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவர்களை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உரமுடைய மூடையை 5000 ரூபாவிற்கும், கிருமி நாசினிகளையும், கலைக் கொல்லிகளையும் நியாயமான விலைக்கு வழங்குவோம்.

QR CODE முறையில் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சாரதிகளுக்கும், சக்தி திட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம். விவசாயிகளின் உற்பத்திகளுக்கும், நெல்லுக்கும் நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, நுகர்வோரையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

original/img-20240831-wa0024
இந்த நாட்டில் உள்ள அரிசி மாபியாக்கள் விவசாயிகளை அசெளவுகரியத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு, செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரிசி மாபியாவுக்கு தடைவிதித்து, விவசாயிகளை ஆட்சி பீடம் ஏற்றுவோம்.

 துன்பத்தில் இருக்கின்ற விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாய கடன் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் விவசாய கடன்களை முழுமையாக இரத்து செய்வோம். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி பிரபஞ்சம், மூச்சு போன்ற செயற்பாட்டின் ஊடாக ஒரு பில்லியன் பெருமதியான வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் கோடீஸ்வரர்கள் செல்வந்தர்களதும் கடன்களை இரத்து செய்துள்ளது. விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய முடியாமல் போயுள்ளது. விவசாயிகள் ஒவ்வொரு போகத்திலும் வேளாண்மை செய்கின்ற போது அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சிக்கின்றது. எனவே விவசாயிகளின் உற்பத்திகளை பாதுகாத்து அவற்றுக்கு நிர்ணய விலை ஒன்றை வழங்கி முறையான விற்பனை விலையை பெற்றுக் கொடுப்போம்.

 தற்போதைய அரசாங்கமும் மாற்று அரசியல் சக்திகளும் இந்த விவசாயிகளை சுமையாக கருதுகின்றனர். கமநல சேவை மத்திய நிலையங்களை தீக்கிரையாக்கியவர்களால் விவசாயிகளை வளப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

original/img-20240831-wa0026
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 28 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(30) அநுராதபுரம் மதவச்சிய நகரில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தின் பால் விவசாயிகளை ஈடுபடுத்தி, டிஜிட்டல் முறைப்படி பூரணப்படுத்தப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவோம். விவசாயிகளுக்கு செய்ய முடியுமான அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி அதை இந்த மண்ணின் யதார்த்தமாக மாற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 வறுமையைப் போக்கும் அபிவிருத்தி பொதி

வறுமையை போக்குவதற்காக புதிய வேலை திட்டங்களை முன்னெடுப்பதோடு ஜனசவிய, சமூர்த்தி, கெமிதிரிய அஸ்வெசும போன்ற திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கிய வறுமையை போக்கும் புதிய வேலை திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதோடு, தொடர்ச்சியாக நிவாரணங்களை வழங்குகின்ற யுகத்தை நிவர்த்தி செய்து, வறுமையில் இருந்து மக்களை மீட்டெடுத்து, சுயமாக தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய யுகம் ஒன்றை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

24 மாதங்களுக்குள் 20 ஆயிரம் ரூபா வீதம் வறுமையான குடும்பங்களுக்கு வழங்குவதோடு, அதற்கு மேலதிகமாக அபிவிருத்தி பொதி ஒன்றையும் வழங்குவோம். சலுகை அடிப்படையில் கடனுதவி வழங்கப்படுவதோடு, அது பாரிய சக்தியாக மாறி அவர்களுக்கு வறுமையிலிருந்து மீட்சி பெற முடியும். எவரும் நீண்ட காலமாக நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் இல்லை என்பதால் இந்த செயல் திட்டத்தின் ஊடாக எவருக்கும் அடிமைப்படாது வாழக்கூடிய பின்புலத்தை உருவாக்குவோம். இந்தத் திட்டங்களை முறையாகவும் சரியாகவும் நடைமுறைப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு சுமையாக இருந்தாலும், அவர்கள் எமக்கு வளமாகும்.

அரச ஊழியர்கள் அரசாங்கத்துக்கு சுமை என்று குறிப்பிட்ட ஜனாதிபதியும் அரசாங்கமும் தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர். அன்று அரச சேவையினால் பிரயோசனம் இல்லை, அது நாட்டுக்கு சுமையாகவும் நட்டமாகவும் காணப்படுகின்றது என்று குறிப்பிட்டவர்கள், இன்று வழங்குகின்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து 24% சம்பள அதிகரிப்பையும், வாழ்க்கைச் செலவை 25,000 ரூபா வரை அதிகரித்தும், குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரித்தும் வழங்குவோம். அரச ஊழியர்களும் நடுத்தர வகுப்பினரும் அரசாங்கத்தின் வரிப்பொறிக்குள் சிக்கி இருப்பதால், 6% தொடக்கம் 36% வீதம் வரை காணப்படுகின்ற வரிசூத்திரத்தை 1% தொடக்கம் 24% வரை குறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கு மீண்டும் 15% வட்டி

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை தற்போதைய அரசாங்கம் குறைத்துள்ளது. எனவே சேமிப்புக்கான வட்டி வீதத்தை 15 வீதமாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும். ஓய்வூதியம் பெற்றவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றது. கோட்டாபய நினைத்த விதத்தில் ஓய்வூதியத்தை இரத்து செய்தாலும், ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுத்து அந்த முரண்பாட்டுக்கான தீர்வினை வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

 

🟩 யானை-மனித மோதல் பிரச்சினைக்கும் தீர்வு

காட்டு யானை-மனித தாக்குதலுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுப்பதோடு, அதற்கான தேசியம் நில பயன்பாட்டு திட்டமொன்றை உருவாக்கி, அதன் ஊடாக விவசாய, வன, இட அமைப்பு திட்டங்களையும் விவசாய மற்றும் கைத்தொழிலுக்கான இடங்களை அடையாளம் கண்டு தேசிய தேசியம் நில பயன்பாட்டு திட்டமொன்றின் ஊடாக வனவிலங்குகள் தாக்குதல்களை குறைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வனவிலங்கு வளங்களை முறையாக முகாமைத்துவப்படுத்துவதோடு, காட்டு யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்து, விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கான தேசிய கொள்கை திட்டம் ஒன்றை உருவாக்குவோம். கலாச்சார சொத்துக்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வனவிலங்கு வளங்களையும் பயன்படுத்தி சுற்றுலா வலயமாக மாற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

🟩 பாதுகாப்புத் துறையினருக்கான சலுகைகள்

முப்படைகள் மற்றும் பொலிஸாரை பாதுகாத்து, அவர்கள் எதிர்கொண்டுள்ள ஓய்வூதிய பிரச்சினைக்கும் பொலிஸாசாருக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்போம். பொலிஸாரின் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் உத்தியோகத்தில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அது பிரச்சினையாக காணப்படுகின்றது எனவே அதனை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு சட்டத்தை பாதுகாப்பதற்கு குறைந்த வசதிகளை வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி சிறந்த முறையில் சட்டத்தை பாதுகாக்கும் துறையாக மாற்றுவோம். பொலிஸ் பிரிவு அரசியல் மயப்படுத்தப்பட்டு இருப்பதை நிறுத்துகின்ற யுகத்தை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

original/fb_img_1725114973219
எமது நாட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 34,000 பேருக்கு 30 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து, அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் முயற்சி செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியும் நானும் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். அவர்கள் சுய விருப்பின் பேரில் ஓய்வு பெற விரும்பினால் அதற்கு தகுந்த தொகை பணம் வழங்கப்பட வேண்டும். பலவந்தமாக அவர்களை ஓய்வூதியம் பெறச் செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

🟩 திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு.

எமது நாட்டில் தொழில் இல்லாத பட்டதாரிகள் அதிகமானோர் இருக்கின்றார்கள். கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்தத் தொகை குறிப்பிடப்பட்டிருந்தாலும், சரியான தொகை என்னவென்று யாருக்கும் தெரியாது. தான் பல மாவட்டங்களில் உள்ள தொழில் வாய்ப்பில்லாத பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினேன். பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க வேண்டிய முறையை தான் சரியான விதத்தில் செயற்படுத்துவேன். அவர்களுக்கு விருப்பமான துறையை தெரிவு செய்வதோடு, இல்லை என்றால் தொழில் முயற்சியை தேர்வு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு அரச மற்றும் தனியார் தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பத்தையும் வழங்குவோம். பட்டதாரிகளின் தகுதி மற்றும் விருப்பம் என்பனவற்றிற்கு அமைய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

🟩 நான் வாய்ச்சொல் தலைவர் அல்ல.

எமது நாடு கட்டியெழுப்பப்படும் விதம் குறித்து அனைவருக்கும் வெற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் போசாக்கு கொள்கை, பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு, கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஐக்கியமான நாட்டில் அனைவருக்கும் வெற்றி தேர்தல் விஞ்ஞாபனம் கிடைக்கப் பெற்ற பின்னர், அதனை வாசித்துப் பார்க்குமாறும் கோட் அணிந்த வாய்ச்சொல் தலைவர்களைப் போலல்லாது, சேவை செய்கின்ற தலைவராக இருப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

🟩 2019-இல் நடந்த விடயங்கள் இன்று உண்மையாகியிருக்கின்றது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பெண்களின் சுகாதாரம் குறித்து சிந்தித்து முன்மொழிபட்ட ஆரோக்கியத் துவாய் குறித்து என்னை இழிவு படுத்தினாலும், அன்று சொன்ன விடயங்கள் இன்று உண்மையாக இருக்கின்றன. தற்பொழுது அரசாங்கம் தேர்தல் காலங்களில் மாத்திரம் மாணவிகளுக்கான ஆரோக்கியத் துவாய்களை வழங்குகின்றது. நான்கரை வருடங்களுக்கு முன்னர் நான் சொன்ன உண்மை இன்று வெற்றி பெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended