• முகப்பு
  • விளையாட்டு
  • வீ .டி.ராஜ் அணிக்கு எழுவர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் அதானியன்ஸ் சாம்பியன்

வீ .டி.ராஜ் அணிக்கு எழுவர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் அதானியன்ஸ் சாம்பியன்

எம்.கே.எம்.நியார்  - பதுளை

UPDATED: Sep 14, 2024, 3:53:44 PM

பதுளையில் மிகவும் பிரபலமான உதைபந்தாட்ட நடுவராக விளங்கிய வீ.டி.ராஜ் ஞாபகார்த்தமாக அவர்களுடைய குடும்பத்தினர்,மற்றும் பதுளை வெடரன்ஸ் உதைபந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு எழுவர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்றது.

 இதில் பதினாறு அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் பதுளை அதானியன்ஸ் அணி பதுளை தூதியன்ஸ் அணியை 3 இற்கு 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியனாகியது. 

original/img-20240912-wa0166
ஆட்ட நாயகனாக. அதானியன்ஸ விளையாட்டும்கழக.ஆஷிக்,மற்றும் சிறந்த கோல் காப்பாளராக எம்.என்.நபீல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சாம்பியனான அணிக்கு முப்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், கிண்ணமும் வீ.டீ.ராஜ் அவர்களுடைய குடும்பத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

  

VIDEOS

Recommended