பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனால் வவுனியாவில் தேர்தல் பிரச்சாரம்
ஓமந்தை
UPDATED: Sep 18, 2024, 3:55:23 PM
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனால் வவுனியாவில் தேர்தல் பிரச்சாரம் ஐரோப்பிய கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடல்...
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷார்ட் பதியுதீனால் இன்றையதினம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசாவினை ஆதாரித்து வவுனியாவில் பிரச்சார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களோடும் ரிசாட் பதியுர்தீன் இதன்போது கலந்துரையாடி இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
துண்டுப்பிரசுரம் வழங்கும்போது கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.