மதுரவாயிலில் மொபெட் மீது கண்டெய்னர் லாரி மோதல் இரட்டை சகோதரர்கள்.

சுந்தர்

UPDATED: Feb 24, 2024, 7:22:33 AM

மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா 24 இவரது சகோதரர் சதீஷ் 23 இரட்டை சகோதரர்களான இருவரும் ஆந்திராவில் வக்கீலுக்கு படித்து வந்தனர்.

இவர்களது நண்பர் ஷாம் சுந்தர் 20 தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து நேற்று இரவு மூன்று பேரும் கோயம்பேடு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

பூந்தமல்லி நெடுஞ்சாலை வீட்டின் அருகே சாலையில் திரும்பியபோது கோயம்பேடு நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் சகோதரர் சதீஷ் மற்றும் அவரது நண்பர் சியாம் சுந்தர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிக் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன ஜீவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

விபத்து காரணமான கண்டெய்னர் லாரி டிரைவர் அஸத் அன்சாரி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended