• முகப்பு
  • இலங்கை
  • இளநெஞ்சன் முர்ஷிதீன் தலைமையில் வலம்புரி கவிதா வட்டத்தின் 97ஆவது கவியரங்கம்

இளநெஞ்சன் முர்ஷிதீன் தலைமையில் வலம்புரி கவிதா வட்டத்தின் 97ஆவது கவியரங்கம்

எம். எப். எம். நசார்

UPDATED: Feb 23, 2024, 3:50:49 PM

வலம்புரி கவிதா வட்டத்தின் 97 ஆவது கவியரங்கு  கொழும்பு பழைய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. வகவ செயலாளர் கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் கவியரங்கிற்குத் தலைமை தாங்கினார். வழமைப்போல வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

 இன்றைய வரவேற்புரையை நிர்வாககக் குழு உறுப்பினர் மஸீதா அன்சார் வழங்க, நன்றியுரையை ஈழகணேஷ் வழங்கினார்.அண்மையில் எம்மைவிட்டும் மறைந்த ஜீவநதி ஆசிரியர் க. பரணீதரனின் தந்தையான கலாநிதி த. கலாமணி அவர்களுக்கான மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.

இளநெஞ்சன் முர்ஷிதீனின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் எம். பிரேம்ராஜ், பிறைக்கவி முஸம்மில், கிண்ணியா அமீர் அலி

வாசுகி பி. வாசு, லிந்துல ஆர். நவரட்னம் , வாழைத்தோட்டம் எம். வஸீர், எம். ஸ்ரீதரன், இ. கலைநிலா, மினுவன்கொட ஏ. சிவகுமார், அருந்தவம் அருணா,ராஜா நித்திலன், சிந்தனைப் பிரியன் முஸம்மில், லைலா அக்ஷியா, மஸீதா அன்சார், தாமரைச் செல்வி, திருஞானசம்பந்தன்ஜீவேஸ்கௌதம், சத்தியகுமாரன் அருணன், ரிஸ்மினா ரபீக்,கமர்ஜான் பீபி, பாத்திமா நாதியாஆர். தங்கமணி, கே. லோகநாதன் ஆகியோர் கவிதை பாடினர்.

தமிழ்த் தென்றல் அலி அக்பர், திருமதி ஜெயா உதயா, வெளிமடை ஜஹாங்கீர், சு. ஜெகதீஸ்வரன், ஏ. எல். நஸீப், அ. உதயகுமார், ரா. ரேணுகா, எம்.எஸ்.எம்.ராஸிக், முஸ்னி முர்ஷித், அமல் பாண்டி, ஏ. சஜூதா, இ. கவிதா, இ. தமிழ் பிரியன், ஆர்.எஸ்.ரஸ்மியா, மாத்தளைக் கமால் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended