பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஊடாக உலர் உணவுப் பொதிகள் விநியோகம்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Mar 21, 2024, 7:00:40 AM
வசதி குறைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக , பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்-அஸீஸ் அவர்களினால், ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் இலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் தகுதியான மக்களுக்கு வழங்குவதற்காக வழங்கி வைக்கப்பட்டன.
Also Read : வீட்டின் கூரையில் விழுந்த பனிக்கட்டியின் ஒரு பகுதி
புனித ரமலான் மாதத்தில் இந்த அமைப்புகளைச் சார்ந்திருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு மத்தியில் இந்த உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
பாகிஸ்தான் எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read : மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் யூ.எல். தாவூத் புதிய பாடசாலை ஆரம்பம்