![](assets/tgi-logo2.jpg)
- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின் வியாபாரி சாவு.
திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின் வியாபாரி சாவு.
![திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின் வியாபாரி சாவு.](https://api.thegreatindianews.com/uploads/original/2884028f-9b43-463e-b9e0-035835814db0-electricity_trader_dies_after_being_hit_by_an_unid.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
JK
UPDATED: Feb 24, 2024, 7:39:24 PM
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (55). இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் மீன் பெற்று வருகிறார்.
Also Read : காந்தியடிகளுக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழர் யார் என்று தெரியுமா ?
இவர் இன்று நவல்பட்டு பகுதியில் உள்ள பூலாங்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரத்திற்காக சென்ற கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
Also Watch : சென்னை மாநகராட்சி மேயர் பிரிய வின் கார் விபத்துக்குள்ளாகி நசுங்கியது
இதில் சம்பவ இடத்திலேயே முனியசாமி தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ
துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யாததால் முனியசாமி மீது மோதிய வாகனம் எதுவென்று தெரியாததால் போலீசார் அப்பகுதியில் வேறு ஏதும் சிசிடிவி பொருத்தப்பட்டு இருக்கிறதா அதன் மூலம் ஏதாவது தகவல் பெற முடியுமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.