தாளவாடி அருகே சூறைக்காற்று வீசியதில் வாழை மரங்கள் சேதம்.

சாம் பென்னட்

UPDATED: Apr 22, 2024, 7:26:46 PM

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே காமையன்புரம் கிராமத்தில் சித்தலிங்கப்பா(45) என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில் 2500 வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended