• முகப்பு
  • கல்வி
  • தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 15, 2024, 4:19:08 AM

இன்று நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

original/img-20240901-wa0070
இன்று பரீட்சையை சிறப்பாக எழுதி, சிறந்த பெறுபேற்றைப் பெற்று நாட்டுக்கு பெறுமை சேர்ப்பதுடன், தங்களது பாடசாலைக்கும் கற்றுத்தந்த ஆசிரியருக்கும் தங்களது பெற்றொருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் , இந்த பரீட்சையை சிறப்பாக எழுத வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வியில் எமது மாவட்டம் சிறந்து விளங்க வேண்டும் என்பதோடு,மாவட்ட ரீதியாகவும் தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற்று, மாவட்டத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் மாணவ செல்வங்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு. மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended