மலேசிய பயணி திருச்சி விமானத்தில் மயங்கி விழுந்து சாவு.

JK

UPDATED: May 27, 2024, 11:30:15 AM

International News 

மலேசியா நாட்டின் சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம்(68). இவர் கடந்த 20ந் தேதி மலேசியாவில் இருந்து தனது மனைவி அமுதாவுடன் திருச்சிக்கு வந்தார்.

பின்னர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை மெயின் ரோடு கோவில்பட்டிக்கு சென்று உறவினர்களை பார்த்தார்.

Live Malaysia News 

மீண்டும் மலேசியா செல்வதற்காக தனது மனைவி அமுதாவுடன் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது திடீரென ராஜலிங்கம் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அமுதா, அவரை உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள தனியார் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் ராஜலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஏர்போர்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் பயணி உயிரிழந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

VIDEOS

Recommended