பூந்தமல்லி அருகே கலவை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு

S.முருகன்

UPDATED: Sep 9, 2024, 9:15:27 AM

பூந்தமல்லி நெடுஞ்சாலை,

பூந்தமல்லியில் தனியாருக்கு சொந்தமான கலவைகள் கலந்து லாரிகளில் எடுத்து செல்லும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது 

இந்த நிறுவனத்திற்க்கு சொந்தமான கலவைகள் ஏற்றி செல்லும் லாரி ஒன்று பணிகள் முடித்துவிட்டு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது

திடீரென கலவை ஏற்றி வந்த லாரியின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்ததை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

Breaking News In Tamil

இதை எடுத்து லாரியில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தபோது தீ கொழுந்து விட்டு எறிந்த நிலையில் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

இதை யடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியின் முன்பகுதியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர்

இதில் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது மற்ற லாரிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது

Latest Chennai News In Tamil

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கலவை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended