கள்ளச் சாராயத்துடன் இருவர் கைது

ஏ. எம். கீத்

UPDATED: Aug 3, 2024, 3:33:46 AM

 திருகோணமலை மாவட்டம் சம்பூர் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 26 ஆயிரத்து 51 மில்லி லிட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டதாக சம்பூர் போலீசார் தெரிவித்தனர்.

 சேனையூர் மற்றும் சந்தோஷபுரம் பிரதேச களப்பு பிரதேசங்களில் சட்ட விரோத மதுபானம் (கசிப்பு) உற்பத்தியில் ஈடுபட்டு அதனை வியாபாரம் செய்தவர்கள் இருவரையே கைது செய்ததாக சம்பூர் பொலிசார் தெரிவித்தனர்.

 சேனையூர் ஆறு சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவரை 25 ஆயிரம் மில்லி லிட்டர் கசிப்புடனும் கடற்கரை சேனை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணையும் கசிப்பு உற்பத்தி

மற்றும் விற்பனை செய்தல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்ததாக சம்பூர் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்த இரு நபர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும்  மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சம்பூர் போலீசார் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended