• முகப்பு
  • குற்றம்
  • திருவேற்காட்டில் டைல்ஸ் கடைக்காரரை அறிவாளால் வெட்டிய இரண்டு பேர் கைது.

திருவேற்காட்டில் டைல்ஸ் கடைக்காரரை அறிவாளால் வெட்டிய இரண்டு பேர் கைது.

ஆனந்த்

UPDATED: Aug 24, 2024, 6:30:50 PM

சென்னை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 50 இவர் திருவேற்காடு கோளடி பகுதியில் தேவி நகரில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் கார்த்திக் வயது 27 என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் திருவேற்காடு அன்பு நகரை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கடந்த 20ஆம் தேதி பைக்கில் வேகமாக வந்து பழனிச்சாமியின் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர் இதில் மூன்று இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது இதனால் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி சிறுவர்களை கண்டித்து தாக்கியுள்ளார்

இதனை அடுத்து அங்கு இருந்து தப்ப முயன்ற சிறுவர்களை பிடிக்க பழனிச்சாமி கார்த்திக் இருவரும் தங்களது பைக்கில் விரட்டி சென்றுள்ளனர்

இந்த சம்பவம் அறிந்த சிறுவர்களின் அண்ணன் அஜித், அவரது நண்பன் சாரதியுடன் வந்து தம்பிகளை விரட்டி வந்த இருவரையும் அறிவாளால் தலை மற்றும் கைப்பகுதிகளில் வெட்டியுள்ளனர்

இதில் பழனிச்சாமிக்கு கை,காது பகுதிகளில் கார்த்திக்கு தோள்பட்டையிலும் வெட்டு விழுந்தது காயம்பட்ட இருவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆவடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அஜித் ,சாரதி மற்றும் இரண்டு சிறுவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் பதுங்கி இருந்த அஜித் மற்றும் சாரதியை திருவேற்காடு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

மேலும் இரண்டு சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர் .இந்த அப்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended