• முகப்பு
  • குற்றம்
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் என்கவுண்டர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் என்கவுண்டர்.

சுரேஷ்பாபு

UPDATED: Jul 14, 2024, 2:06:05 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர்

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் 

இந்த வழக்கில் சுமார் 11 பேர் கைது செய்யப்பட்டனர் 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர் 

இந்த விசாரணையில் அவர் பல்வேறு உண்மைகளை காவல்துறையிடம் தெரிவித்ததின் பெயரில் அதன் புலன் விசாரணைக்காக தடயங்களை சேகரிப்பதற்காக அவரை மாதவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்

Latest Crime News In Tamil

இந்த நிலையில் அவர் போலீஸ்காவிலிருந்து தப்பிவிடும் முயன்றதாக தெரிய வருகிறது 

இதனை அடுத்து போலீசார் அவரை சரணடையுமாறு பலமுறை எச்சரிக்கை செய்தனர் ஆனால் அவர் சரணடைய மறுத்து வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது 

இதனைத் தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக அவரை மூன்று ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது 

Latest Chennai District News

இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே ரவுடி திருவேங்கடம் பிணமானார்,  தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டாண்டில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்த என்கவுண்டர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

மேலும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளி என அருள் என்பவரின் உயிர் நண்பர் ஆவார் 

இவர்தான் இந்த கொலை காண திட்டங்கள் தீட்டியது மற்றும் கொலை திட்டம் வகுத்து வேவு பார்த்தது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது 

அதிகாலை நேரத்தில் பிரபல ரவுடி போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended