• முகப்பு
  • சினிமா
  • ரஞ்சன் ராமநாயக்கா மீது சுமத்தப்பட்ட நிதிமோசடி குற்றம்சாட்டில் அவர் விடுதலை

ரஞ்சன் ராமநாயக்கா மீது சுமத்தப்பட்ட நிதிமோசடி குற்றம்சாட்டில் அவர் விடுதலை

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Jun 13, 2024, 6:22:20 AM

முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள சினிமா நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கா மீது சுமத்தப்பட்ட நிதிமோசடி குற்றம்சாட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கண்டி பிரதான நீதவான் மன்றில் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கில் சகல குற்றங்களில் இருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கண்டி பிரதேச பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவரிடமிருந்து பத்து இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கட்டுகாஸ்தோட்டைப் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. 

இம் முறைப்பாடு தொடர்பாக கடந்த 13 வருடங்களாக விசாரணைகள் இடம் பெற்றவேளை கடந்த 12ம் திகதி மேற்படி வழக்கு விசாரணைகள் பூரணமடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

கண்டி மாஜிஸ்திரேட், மற்றும் மேலதிக மாஜிஸ்திரேட் உற்பட பல் நீதிமன்றங்களில் இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றன. 

இறுதியாக விசாணை நடை பெற்ற போது கண்டி பிரதான நீதவான் சாமர விக்ரமநாயக்க மேற்படி தீர்பை வழங்கி அவரை விடுதலை செய்தார். 

இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு வளியே வநபோது ரஞ்சன் ராமநாயக்கா கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார்-

எது வித அடிப்படையும் அற்றவிதத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்படிருந்ததாகவும் ஒரு சில அரசியல் பின்னணி இதில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். தாம் இவ்வழக்கிற்காக சில சமயங்களில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்ப வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டதாகவும், தனக்கு இவ்வழக்கு தொடர்பாக 80 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். 



VIDEOS

Recommended