• முகப்பு
  • சென்னை
  • கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன் கடை ஷட்டரை உடைத்து விலை உயர்ந்த செல்போன் பணம் திருடிய திருடன்.

கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன் கடை ஷட்டரை உடைத்து விலை உயர்ந்த செல்போன் பணம் திருடிய திருடன்.

பிரேம்

UPDATED: Apr 25, 2024, 3:36:49 PM

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ராஜா என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பூட்டி இருந்த கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

பின்னர் அவ்வழியாக சென்ற மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள் சிலர் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த கடையின் உரிமையாளர் ஷட்டர் உடைக்கப்பட்டு செல்போன் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுக்குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (33) என தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு சம்பந்தமான குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • 9

VIDEOS

Recommended