• முகப்பு
  • சென்னை
  • சென்னை போரூரில் மெட்ரோ குடிநீர் வாரியத்தின் பணியை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி  ஆய்வு.

சென்னை போரூரில் மெட்ரோ குடிநீர் வாரியத்தின் பணியை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி  ஆய்வு.

பிரேம்

UPDATED: Apr 27, 2024, 7:16:16 AM

சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தின் சார்பில் பிரதான குழாய் மாற்றும் பணி சென்னை போரூரில் இன்று நடைபெற்றது.

இந்தப் பணியை மதுரவாயில் எம்எல்ஏ கணபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிபுரிந்த ஊழியர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்திய அவர் கோடைகாலத்தில் மக்களின் குடிநீர் சேவையை குறித்தும் எடுத்துரைத்தார். 

முன்னதாக இந்த பணி காரணமாக சென்னையில் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் இந்த பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று 27 ம் தேதி இரவு 9 மணிக்குள் பணி முடிக்கப்பட்ட 28 முதல் முதல் சீரான குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்திருந்தது.

மேலும் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் வசதியையும் குடிநீர் வாரியம் செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • 11

VIDEOS

Recommended