- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேர்தல் முடிந்தாலும் குறைதீர் நாளில் 'வெறிச்'.
தேர்தல் முடிந்தாலும் குறைதீர் நாளில் 'வெறிச்'.
TGI
UPDATED:
லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தது முதல், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், வேளாண் குறைதீர் கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் கலெக்டர் அலுவல கத்துக்கு புகார் மனு வழங்க வருவோருக்காக, நுழைவு வாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், நேற்று வழக்கம்போல மக்கள் புகார் மனுக்களை வழங்குவார்கள் என அதி காரிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், 30க்கும் குறைவான மக்களே மனுக்களுடன் வந்து, பெட்டியில் போட்டு சென்றனர்.
அத்துடன் தேர்தல் முடிந்த பின் அடுத்த வேலை நாள் என்பதால், கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள், மக்கள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.