திருச்சி அருகே கார்கில் வெற்றி தினம் - கார்கில் போரில் பங்கேற்ற வீரர் பங்கேற்பு.

TGI

UPDATED:

திருச்சி மாவட்டம்

முசிறி அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கார்கில் நினைவு தினம் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமையில் கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சியில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தப்பட்டது.

Latest District News in Tamil 

இந்த நிகழ்ச்சிக்கு, கார்கில் யுத்தத்தில் பங்கெடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தனது கார்கில் யுத்தத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யுத்த வரம்பை மீறி தாக்குதல் நடத்திய போது18,400 மீட்டர் உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து, தீவிரவாதத்தை முறியடித்து கார்கில் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த நினைவுகளையும், 

Kargil War

ராணுவ வீரர்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் பற்றியும் சமுதாயத்தில் அவர்களுக்குக் கிடைக்கும்  பெருமைகள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துக் கூறி எதிர்காலத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுகோள் விடுத்தார். 

நிகழ்வில் ஆசிரியர்கள் தண்டபாணி, சித்ரா ,தேவசுந்தரி, சத்யா, நிர்மலா, சரவணன், இலட்சுமணன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மை குழுவினரும் ஊர் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended